search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்: முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் அறிவிப்பு
    X

    கருணாஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்: முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் அறிவிப்பு

    முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ.வை நீக்குவதாக பொதுச்செயலாளர் பாண்டித்துரை இன்று அறிவித்தார்.

    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத்தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளுக்கும், கருணாஸ் எம்.எல்.ஏ.க்கும் இடையே கட்சி நிலைபாடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு நீக்குவதாக கருணாஸ் எம்.எல்.ஏ. சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை, துணைத் தலைவர் சந்தனக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    கருணாஸ் எம்.எல்.ஏ. தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். கட்சி வளர்ச்சிக்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அவர் தனிப்பட்ட முறையில் எம்.எல்.ஏ. பதவியை பயன்படுத்துகிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கருணாசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

    இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு நீக்குவதாக கருணாஸ் எம்.எல்.ஏ. ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது

    நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் பொதுச் செயலாளரின் முடிவாகும். நிர்வாகிகளை நீக்குவதற்கு கருணாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் சம்பாதிக்கும் பணத்தில் நாங்கள் பங்கு கேட்பதாக கூறுவது தவறான குற்றச் சாட்டாகும். பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். தன்னிச்சையாக நடந்து வரும் கருணாஸ் எம்.எல். ஏ.வை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளோம். புதிய தலைவராக சந்தனக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளராக போட்டியிடும் டிடிவி.தினகரனுக்கு முக்குலத்தோர் புலிப்படை முழு ஆதரவை தெரிவிக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×