என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடற்படையின் பழமையான 3 போர் விமானங்களின் சேவை நிறைவு
Byமாலை மலர்28 March 2017 3:23 AM GMT (Updated: 28 March 2017 3:23 AM GMT)
இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய 3 பழமையான போர் விமானங்களின் சேவை நிறைவு பெறுகிறது. இவைகளை விடுவிக்கும் விழா அரக்கோணத்தில் நாளை நடக்கிறது.
சென்னை:
இந்திய கடற்படையில் பணியாற்றிய ‘டுபோலெவ்-142 எம்’ ரக போர் விமானங்கள் 29 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துவிட்டு நாளை (புதன்கிழமை) பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. ரஷியா நாட்டு தயாரிப்பான இந்த போர் விமானங்கள் 1988-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன.
4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த கண்காணிப்பு போர் விமானம் எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்கும் திறன் கொண்டவை. இதுபோன்ற 8 விமானங்கள் இருந்த நிலையில், தற்போது 3 விமானங்கள் மட்டுமே பணியில் உள்ளன. இதுபோன்ற பழமையான கண்காணிப்பு விமானங்களுக்கு பதிலாக தற்போது ‘12 பி-81 போயிங்’ ரக விமானங்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வகை போர் விமானங்களும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்கும் திறன் கொண்டவையாகும். இவற்றில் இலகு ரக ராக்கெட் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. நவீன ரேடார்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. இதனால் கடற்படையில் உள்ள டுபோலெவ்-142 ரக விமானங்களை பணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
சேவையை நிறைவு செய்த இந்த விமானங்கள் கடற்படையில் எந்த விபத்தையும் சந்திக்காமல் 30 ஆயிரம் மணி நேரம் பறந்து இருக்கின்றன. கடற்படை சார்பில் நடந்த பல போர் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளில் பங்கெடுத்து உள்ளன. அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த 3 விமானங்களும் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.
இதற்கான விழாவில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வையொட்டி நேற்று கண்காட்சி மற்றும் பயிற்சி ஒத்திகை நடந்தது. இதில் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்திய கடற்படையில் பணியாற்றிய ‘டுபோலெவ்-142 எம்’ ரக போர் விமானங்கள் 29 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துவிட்டு நாளை (புதன்கிழமை) பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. ரஷியா நாட்டு தயாரிப்பான இந்த போர் விமானங்கள் 1988-ம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன.
4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த கண்காணிப்பு போர் விமானம் எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்கும் திறன் கொண்டவை. இதுபோன்ற 8 விமானங்கள் இருந்த நிலையில், தற்போது 3 விமானங்கள் மட்டுமே பணியில் உள்ளன. இதுபோன்ற பழமையான கண்காணிப்பு விமானங்களுக்கு பதிலாக தற்போது ‘12 பி-81 போயிங்’ ரக விமானங்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வகை போர் விமானங்களும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்கும் திறன் கொண்டவையாகும். இவற்றில் இலகு ரக ராக்கெட் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. நவீன ரேடார்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. இதனால் கடற்படையில் உள்ள டுபோலெவ்-142 ரக விமானங்களை பணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
சேவையை நிறைவு செய்த இந்த விமானங்கள் கடற்படையில் எந்த விபத்தையும் சந்திக்காமல் 30 ஆயிரம் மணி நேரம் பறந்து இருக்கின்றன. கடற்படை சார்பில் நடந்த பல போர் பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளில் பங்கெடுத்து உள்ளன. அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த 3 விமானங்களும் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.
இதற்கான விழாவில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வையொட்டி நேற்று கண்காட்சி மற்றும் பயிற்சி ஒத்திகை நடந்தது. இதில் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X