search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக டிராபிக் ராமசாமி மீது பெண் பக்தர்கள் புகார்
    X

    இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக டிராபிக் ராமசாமி மீது பெண் பக்தர்கள் புகார்

    பெண்களை இழிவுபடுத்தியதாக டிராபிக் ராமசாமி மீது வழக்குபதிவு செய்ய கோரி பெரம்பலூர் எஸ்.பி.யிடம் ஆதி பராசக்தி மன்ற பக்தர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சோனல் சந்திராவிடம் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த பக்தர்கள் புகார் மனு அளித்தனர்.

    அதில் சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி , மேல்மருவத்தூரில் கடந்த மாதம் 28-ம் தேதி அன்று பெண்களை கேவலமாக இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.

    மேலும் ஆதிபராசக்தி பக்தர்களை இழிவு செய்யும் காட்சிகளை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆதிபராசக்தி பக்தர்கள் குறித்து பகிர்ந்துள்ள காட்சிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×