search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் கல்லூரி வேன் மீது லாரி மோதி கோர விபத்து: 4 மாணவிகள் பலி
    X

    தக்கலையில் கல்லூரி வேன் மீது லாரி மோதி கோர விபத்து: 4 மாணவிகள் பலி

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் மீது லாரி மோதியதில் நான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிராமம் புலியூர்குறிச்சி. இந்த கிராமம் அருகே இன்று மதியம் தனியார் கல்லூரிக்கு சொந்தமான வேன் ஒன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது.

    இதில் சிவரஞ்சினி, தீபா, மஞ்சி, சங்கீதா ஆகிய நான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×