என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்
Byமாலை மலர்23 March 2017 4:35 PM GMT (Updated: 23 March 2017 4:35 PM GMT)
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை:
கடந்த 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகுந்திராபாத் நகரில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியகராஜன் ஆகும். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், சென்னைக்கு வந்த அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். 1960-ம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக களமிறங்கினார்.
இந்நிலையில், 85 வயதான அசோகமித்ரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அன்பின் பரிசு, தண்ணீர், மானசரோவர், அப்பாவின் சினேகிதர், ஒற்றன் போன்ற நாவல்களை அசோகமித்ரன் எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 15 கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
இதில் அப்பாவின் சினேகிதர் நாவல் 1996-ம் ஆண்டிற்கான ’சாகித்ய அகாடமி’ விருதை பெற்றுள்ளார். மேலும், தண்ணீர் நாவல் வாசகர்களிடம் மிகப் பிரபலமானவை ஆகும். ’இலக்கியச் சிந்தனை’ விருதையும் இருமுறை வென்றுள்ளார்.
கடந்த 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகுந்திராபாத் நகரில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியகராஜன் ஆகும். தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், சென்னைக்கு வந்த அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். 1960-ம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக களமிறங்கினார்.
இந்நிலையில், 85 வயதான அசோகமித்ரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அன்பின் பரிசு, தண்ணீர், மானசரோவர், அப்பாவின் சினேகிதர், ஒற்றன் போன்ற நாவல்களை அசோகமித்ரன் எழுதியுள்ளார். 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 15 கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
இதில் அப்பாவின் சினேகிதர் நாவல் 1996-ம் ஆண்டிற்கான ’சாகித்ய அகாடமி’ விருதை பெற்றுள்ளார். மேலும், தண்ணீர் நாவல் வாசகர்களிடம் மிகப் பிரபலமானவை ஆகும். ’இலக்கியச் சிந்தனை’ விருதையும் இருமுறை வென்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X