என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் கன்னத்தில் அறைந்த கல்லூரி மாணவி
Byமாலை மலர்23 March 2017 11:46 AM GMT (Updated: 23 March 2017 11:46 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவி பாதுகாப்பு படை வீரர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
அகமதாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பசாந்தி உள்பட 3 பேர் ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக சென்னை வந்து இருந்தனர். நேற்று மாலை அவர்கள் மீண்டும் அகமதாபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயிலில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அபிலேஷ்குமார் மாணவிகளிடம் விமான டிக்கெட்டை காண்பிக்குமாறு தெரிவித்தார்.
ஏற்கனவே விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் மாணவிகள் டிக்கெட்டை காண்பிக்காமல் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் தடுத்து நிறுத்தினார். இதில் மாணவி பசாந்தி மீது லேசாக கை பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் கன்னத்தில் அறைந்தார்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளும், சப்-இன்ஸ்பெக்டரும் வருத்தம் தெரிவித்து சமாதானமாக செல்வதாக கூறினர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் பசாந்தி உள்பட 3 பேர் ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக சென்னை வந்து இருந்தனர். நேற்று மாலை அவர்கள் மீண்டும் அகமதாபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
உள்நாட்டு முனையம் 4-வது நுழைவு வாயிலில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அபிலேஷ்குமார் மாணவிகளிடம் விமான டிக்கெட்டை காண்பிக்குமாறு தெரிவித்தார்.
ஏற்கனவே விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததால் மாணவிகள் டிக்கெட்டை காண்பிக்காமல் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் தடுத்து நிறுத்தினார். இதில் மாணவி பசாந்தி மீது லேசாக கை பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சப்- இன்ஸ்பெக்டர் அபிலேஷ் குமார் கன்னத்தில் அறைந்தார்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளும், சப்-இன்ஸ்பெக்டரும் வருத்தம் தெரிவித்து சமாதானமாக செல்வதாக கூறினர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X