என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிவகங்கையில் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் மோதல்- 4 பேர் கைது
சிவகங்கை:
சிவகங்கை நகர் டி.புதூரை சேர்ந்தவர் கண்ணாத்தாள் (வயது 55). இவரை உறவினர் கார்த்திகேயன் கேலி செய்தாராம்.
இதுகுறித்து தனது மகன்கள் மணிகண்டன் (39), ஸ்ரீதர் (32), மோகன்ராஜ் (36), ஆகியோரிடம் கண்ணத்தாள் கூறியுள்ளார். அதன் பேரில் 3 பேரும் கார்த்தி கேயன் வீட்டிற்கு சென்று கேட்க சென்றனர்.
அப்போது அங்கு அவர் இல்லை. இதனால் அங்கிருந்த ஜெயச்சந்திரன் (35) என்பவரிடம் இதுபற்றி கேட்டனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து கம்பால் ஜெயச்சந்திரனை தாக்கினர். அப்போது அங்கு கார்த்திகேயன் வர, அவருக்கும் அடி- உதை விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதில் தன்னை தாக்கியவர்கள் தான் அணிதிருந்த நகையை பறித்து சென்றுவிட்டனர். என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தார்.
இதற்கிடையில் மோகன்ராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த கார்த்திகேயன், சங்கர், சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்