search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் மோதல்- 4 பேர் கைது
    X

    சிவகங்கையில் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் மோதல்- 4 பேர் கைது

    பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் டி.புதூரை சேர்ந்தவர் கண்ணாத்தாள் (வயது 55). இவரை உறவினர் கார்த்திகேயன் கேலி செய்தாராம்.

    இதுகுறித்து தனது மகன்கள் மணிகண்டன் (39), ஸ்ரீதர் (32), மோகன்ராஜ் (36), ஆகியோரிடம் கண்ணத்தாள் கூறியுள்ளார். அதன் பேரில் 3 பேரும் கார்த்தி கேயன் வீட்டிற்கு சென்று கேட்க சென்றனர்.

    அப்போது அங்கு அவர் இல்லை. இதனால் அங்கிருந்த ஜெயச்சந்திரன் (35) என்பவரிடம் இதுபற்றி கேட்டனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

    சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து கம்பால் ஜெயச்சந்திரனை தாக்கினர். அப்போது அங்கு கார்த்திகேயன் வர, அவருக்கும் அடி- உதை விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். அதில் தன்னை தாக்கியவர்கள் தான் அணிதிருந்த நகையை பறித்து சென்றுவிட்டனர். என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தார்.

    இதற்கிடையில் மோகன்ராஜ் ஒரு புகார் கொடுத்தார். அதன் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த கார்த்திகேயன், சங்கர், சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×