search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர் தங்கராசு.
    X
    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர் தங்கராசு.

    இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு

    புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 142 விசைப்படகுகளில் 600க்கும் மேற் பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் பாலமுருகன் என்பவரின் விசைப்படகில் சென்ற தங்கராசு (வயது 45), குவின்தாஸ் (19), சின்னப்பால் (48), வடிவேல் (35), அப்பு (18) ஆகிய 5 பேரும், ராஜேந்திரன் என்பவரின் விசைப்படகில் சென்ற அழகேந்திரன்(45), முருகானந்தம்(35), சேகர் (45) மற்றும் ராஜேந்திரன் ஆகிய 4பேரும் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டி ருந்தனர். பின்னர் ராஜேந்திரன் படகில் இருந்த 3 பேரும், பாலமுருகன் விசைப்படகில் ஏறி அதில் இருந்த மீனவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் அங்கு படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி பாலமுருகனின் விசைப்படகை சிறைப்பிடித்ததோடு, அதில் 8 பேரையும் கைது செய்தனர். ராஜேந்திரன் இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பி தனது விசைப்படகுடன் கரை திரும்பி விட்டார். சிறைப்பிடிக்கப்பட்ட 8 பேரையும், இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் கரை திரும்பிய ராஜேந்திரன், 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டது குறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் வடித்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

    இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் 129 விசைப்படகுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்களை மீட்க மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×