search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,224-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை ரூ.288 உயர்ந்து ஒரு பவுன் ரூ.22,224 ஆக உள்ளது.

    தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 992 ஆக இருந்தது. மறுநாள் (20-ந்தேதி) பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.22 ஆயிரத்துக்கு விற்றது.

    நேற்று ரூ.64 குறைந்து பவுன் ரூ.21 ஆயிரத்து 936 ஆக இருந்தது. இன்று ஒரேநாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.288 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 224 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.36 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,778-க்கு விற்கிறது.

    பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.44.10க்கு விற்கிறது.
    Next Story
    ×