search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் இறந்த மாரிமுத்து
    X
    துபாயில் இறந்த மாரிமுத்து

    புதுக்கோட்டை வாலிபர் துபாயில் மர்ம மரணம்

    புதுக்கோட்டை வாலிபர் துபாய் நாட்டில் மர்மமான முறையில் இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் பரவாக்கோட்டை கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). இவருக்கு திருமணமாகி காயத்திரி (27) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    விவசாய கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மாரிமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப வறுமை காரணமாக துபாய் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றார். அங்கு அரபுடெக் என்ற தனியார் நிறுவனத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாரிமுத்துவின் மனைவி காயத்திரிக்கு துபாயில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் உங்கள் கணவர் மாரிமுத்து துபாயில் இறந்து விட்டார் என்றும், அவரது உடல் அங்குள்ள ரசிதியா என்ற தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்டு தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சியடைந்த காயத்திரி கதறி அழுதார். மேலும் இது பற்றி தனது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த துபாய் நாட்டில் வேலை பார்த்து வரும் பூபதி என்பவரது உதவியையும் நாடினர்.

    மாரிமுத்துவின் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரித்து கூறுமாறு கேட்டுக்கொண்டனர். பூபதிக்கும், மாரிமுத்து இறந்த தகவல் மட்டுமே கிடைத்துள்ளது.

    மாரிமுத்து இறந்த தகவல் கேட்டு அவரது மனைவி காயத்திரி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி.


    இதற்கிடையே மாரிமுத்துவின் மனைவி காயத்திரி நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசிடம் புகார் மனு கொடுத்தார். அதில் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்த வேண்டும் என்றும், உடனடியாக கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், இந்திய தூதரகம் மூலம் மாரிமுத்துவின் உடலை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் உதவி கோரியுள்ளார்.

    புதுக்கோட்டை வாலிபர் துபாய் நாட்டில் மர்மமான முறையில் இறந்தது அவரது உறவினர்கள் மற்றும் பரவாக்கோட்டை கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×