என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்
Byமாலை மலர்21 March 2017 11:03 AM GMT (Updated: 21 March 2017 11:03 AM GMT)
கோடையில் அதிக வெப்பத்துக்கு மக்கள் சிரமத்துக்குள்ளாகிய நிலையில் திம்பம் மலைப் பாதையில் நிலவும் பனிப் பொழிவால் பயணிகள், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்கிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர், திம்பம் வனப்பகுதியில் சில தினங்களாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியது.
தற்போது திம்பம் மலைப்பாதையில் திடீரென பனிமூட்டம் காணப்படுகிறது. ஆசனூர், திம்பம் மலைக்குன்றுகளில் மேகமூட்டம் படர்ந்து வெள்ளைகம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கிறது. அங்கு காலை 7 மணிவரை இருள் சூழ்ந்தது காணப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். பனிமூட்டம் திம்பம் சாலையை சூழ்ந்துகொண்டு எதிரே வாகனங்கள் தெரியாதபடி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
கோடையில் அதிக வெப்பத்துக்கு மக்கள் சிரமத்துக்குள்ளாகிய நிலையில் திம்பம் மலைப் பாதையில் நிலவும் பனிப் பொழிவால் பயணிகள், சுற்றுலா பயணிகள் திம்பம் மலைப்பாதையில் நின்று இளைப்பாறிச் செல்கின்றனர். இயற்கை அழகை ரசித்தபடியும் செல்கிறார்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர், திம்பம் வனப்பகுதியில் சில தினங்களாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியது.
தற்போது திம்பம் மலைப்பாதையில் திடீரென பனிமூட்டம் காணப்படுகிறது. ஆசனூர், திம்பம் மலைக்குன்றுகளில் மேகமூட்டம் படர்ந்து வெள்ளைகம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கிறது. அங்கு காலை 7 மணிவரை இருள் சூழ்ந்தது காணப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். பனிமூட்டம் திம்பம் சாலையை சூழ்ந்துகொண்டு எதிரே வாகனங்கள் தெரியாதபடி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
கோடையில் அதிக வெப்பத்துக்கு மக்கள் சிரமத்துக்குள்ளாகிய நிலையில் திம்பம் மலைப் பாதையில் நிலவும் பனிப் பொழிவால் பயணிகள், சுற்றுலா பயணிகள் திம்பம் மலைப்பாதையில் நின்று இளைப்பாறிச் செல்கின்றனர். இயற்கை அழகை ரசித்தபடியும் செல்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X