search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயல்பட்டினத்தில் பந்தய புறாக்களை திருடியவர் கைது
    X

    காயல்பட்டினத்தில் பந்தய புறாக்களை திருடியவர் கைது

    காயல்பட்டினத்தில் பந்தய புறாக்களை திருடி விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெருவை சேர்ந்தவர் மக்புல் ஜீமான் (வயது 31). இவர் தனது வீட்டின் வெளியே கூண்டு அமைத்து பந்தய புறாக்கள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று காலையில் பார்த்தபோது, ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பந்தய புறாக்கள் மூன்றை காணவில்லை. யாரோ இரவில் அவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இது பற்றி மக்புல் ஜீமான் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்நிலையில் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் வர்தா மர்தார் (25) என்பவர் திருடிய புறாக்களை நேற்று ஆத்தூர் தீன் என்பவரிடம் விற்க செல்வதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடமிருந்து 3 புறாக்களும் மீட்கப்பட்டன.
    Next Story
    ×