search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை: கோவை கோர்ட்டில் மேலும் ஒரு வாலிபர் சரண்
    X

    திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை: கோவை கோர்ட்டில் மேலும் ஒரு வாலிபர் சரண்

    திராவிடர் விடுதலை கழக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் தொர்புடைய வாலிபர் கோவை கோட்டில் சரண் அடைந்தார்.

    கோவை:

    கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் பாரூக். திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஆவார். இவரை கடந்த 16-ந் தேதி ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து பெரிய கடைவீதி போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாரூக் கொலையில் தொடர்புடைய போத்தனூரை சேர்ந்த வாலிபர் சதாம் உசேன் கோவை ஜே.எம். கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு செல்வகுமார் முன்பு இன்று காலை சரண் அடைந்தார்.

    இதற்கிடையே ஏற்கனவே இந்த கொலை வழக்கில் போத்தனூரை சேர்ந்த அன்சாத் என்பவரும் ஜே.எம். கோர்ட்டில் (எண்-5) சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அன்சாத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி அன்சாத்தை காவலில் எடுத்து விசாரிக்க இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×