என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி கொலை: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மங்கலக்குடியை அடுத்துள்ள அடுத்தக் குடியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் தாரணி (வயது19), சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
தாரணி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த குமார் (32) என்பவர் அங்கு புகுந்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
தாரணியை நான் நீண்ட நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்தேன். சென்னையில் வேலை பார்த்து வந்த நான், அவரை பார்ப்பதற்காக அடிக்கடி ஊருக்கு வந்தேன். பலமுறை தாரணியிடம் காதலை தெரிவிக்க முயன்றும் அவர் மறுத்துவிட்டார்.
இருப்பினும் பெண் கேட்டு எனது குடும்பத்தினர் அங்கு சென்றனர். ஆனால் தாரணி குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வெறி ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று தாரணியின் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர்.
அப்போது தாரணி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த நான், பின்பக்க வழியாக அங்கு புகுந்தேன். அவளிடம் திருமணத்திற்கு வலியுறுத்தினேன். ஆனால் தாரணி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நான் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக வீட்டில் இருந்த டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்திருந்தேன். ஆனால் அந்த சத்தம் நீண்ட நேரமாக அப்படியே கேட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்து என்னை பிடித்து விட்டனர்.
இதன் அடிப்படையில் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்