என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலர்களைத்தான் அழிக்கமுடியும்; காதலை அழிக்கமுடியாது: கவுசல்யா பேச்சு
Byமாலை மலர்20 March 2017 4:41 AM GMT (Updated: 20 March 2017 4:41 AM GMT)
காதலர்களைத் தான் அழிக்கமுடியும், காதலை அழிக்கமுடியாது என உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தெரிவித்தார்.
பொள்ளாச்சி:
காதல் கலப்பு திருமணம் செய்த உடுமலையை சேர்ந்த சங்கர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பாக பொள்ளாச்சியில் நடைபெற்றது. திலீபன் வரவேற்றார். நிர்வாகி பாரி தலைமை வகித்தார்.
இதில் உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா பேசியதாவது, தமிழகத்தில் நடைபெறும் ஆணவப்படுகொலைகள் கண்டிக்க தக்கது. அதற்கு எதிராக சட்டம் கொண்டுவரவேண்டும். ஜாதிகளை சுமப்பது பாவமாகும். காதலர்களைத்தான் அழிக்கமுடியும், காதலை அழிக்கமுடியாது. ஜாதிகளால் பல குடும்பங்கள் தமிழகத்தில் சிதைந்துவிட்டது. பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்க முழு உரிமையை தரவேண்டும் என்றார்.
விழாவில் திராவிடர் கழக நிர்வாகி பரமசிவம், மக்கள் விடுதலை முன்னணி நிர்வாகி ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கோபால், அம்பேத்கர் இளைஞர் முன்னணி மணிமாறன், திராவிடர் விடுதலை கழகம் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவை நிர்வாகி கருப்புசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மோகன், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காதல் கலப்பு திருமணம் செய்த உடுமலையை சேர்ந்த சங்கர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பாக பொள்ளாச்சியில் நடைபெற்றது. திலீபன் வரவேற்றார். நிர்வாகி பாரி தலைமை வகித்தார்.
இதில் உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா பேசியதாவது, தமிழகத்தில் நடைபெறும் ஆணவப்படுகொலைகள் கண்டிக்க தக்கது. அதற்கு எதிராக சட்டம் கொண்டுவரவேண்டும். ஜாதிகளை சுமப்பது பாவமாகும். காதலர்களைத்தான் அழிக்கமுடியும், காதலை அழிக்கமுடியாது. ஜாதிகளால் பல குடும்பங்கள் தமிழகத்தில் சிதைந்துவிட்டது. பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்க முழு உரிமையை தரவேண்டும் என்றார்.
விழாவில் திராவிடர் கழக நிர்வாகி பரமசிவம், மக்கள் விடுதலை முன்னணி நிர்வாகி ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கோபால், அம்பேத்கர் இளைஞர் முன்னணி மணிமாறன், திராவிடர் விடுதலை கழகம் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவை நிர்வாகி கருப்புசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மோகன், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X