என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை
Byமாலை மலர்20 March 2017 2:42 AM GMT (Updated: 20 March 2017 2:42 AM GMT)
இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் யாரும் கண்டிப்பாக மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வள துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயமடைந்தார்.
இந்தநிலையில் இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்வள துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
அதில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக முறையான அனுமதி டோக்கன் பெற்று தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதுபோல் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அடையாள அட்டைகளை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்பதுடன் அதன் நகலையும், பெயர்களையும் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்துதான் செல்ல வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளை வைத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. மேலும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் யாரும் கண்டிப்பாக மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மீன் துறை டோக்கன் அலுவலக வாசலில் உள்ள அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் ராமேசுவரம் துறைமுகம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயமடைந்தார்.
இந்தநிலையில் இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்வள துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
அதில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக முறையான அனுமதி டோக்கன் பெற்று தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதுபோல் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அடையாள அட்டைகளை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என்பதுடன் அதன் நகலையும், பெயர்களையும் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்துதான் செல்ல வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளை வைத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. மேலும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீனவர்கள் யாரும் கண்டிப்பாக மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மீன் துறை டோக்கன் அலுவலக வாசலில் உள்ள அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் ராமேசுவரம் துறைமுகம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X