என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் 101 டிகிரி வெயில் கொளுத்தியது
Byமாலை மலர்19 March 2017 1:23 PM GMT (Updated: 19 March 2017 1:23 PM GMT)
வேலூரில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மக்கள் தற்போது வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. கோடை காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் 3-வது முறையாக வெயில் 100 டிகிரியை எட்டி உள்ளது.
கடந்த 9-ந்தேதி 100 டிகிரியாகவும், அதைத்தொடர்ந்து 11-ந்தேதி 102.2 டிகிரியாகவும் வெயில் அளவு பதிவானது. தற்போது 3-வது முறையாக நேற்று வெயிலின் அளவு 101 டிகிரியாக பதிவானது. இனிவரும், நாட்களில் வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆற்காடு நகரில் திடீரென சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஓடியது. மேலும் குளிர்காற்று வீச தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X