search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்கள் முற்றுகை
    X

    பொன்னேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்கள் முற்றுகை

    பொன்னேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையான ஆவணங்கள் இருந்தும் அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 50-க்கும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
    பொன்னேரி:

    பொன்னேரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறையான ஆவணங்கள் இருந்தும் அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்ய மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூடுதல் பணம் கேட்பதை கண்டித்தும் நிலத்தரகர்கள் சங்கத்தினர் மற்றும் பில்டர்ஸ் அமைப்பினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க மாவட்ட தலைவர் பத்மநாபன், திருவள்ளூர் மாவட்ட பில்டர் அமைப்பு தலைவர் குமார் தலைமை தாங்கினர்.

    பின்னர் அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சார்பதிவாளருக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை பொன்னேரி பஜாரில் உள்ள அம்பேத்கார் சிலை அருகே நிலத்தரகர்கள் சங்கத்தினர் மற்றும் பில்டர்ஸ் அமைப்பினர் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Next Story
    ×