search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் கனமழை: குடிநீர் வழங்கும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து
    X

    கொடைக்கானலில் கனமழை: குடிநீர் வழங்கும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணை மற்றும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும் கன மழையும் பெய்து வருகிறது. நேற்று இரவு சுமார் 2½ மணி நேரம் கன மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணையின் நீர் மட்டம் 4 அடி உயர்ந்தது. நேற்று பெய்த மழையின் காரணமாக மேலும் 1 அடி உயர்ந்து உள்ளது.

    இதே போல் ஏரியிலும் வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் நீர் வீழ்ச்சி, பியர் சோழா ஆகிய பகுதிகளிலும் அதிக நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    பருவ மழை சீசனில் கூட சரியாக மழை பெய்யாத நிலையில் தற்போது கோடை காலத்தில் பெய்து வரும் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அணைகளுக்கு நீர் வரத்து உயர்ந்து உள்ளதால் கோடையில் ஏற்பட இருந்த தண்ணீர் தட்டுப்பாடும் ஓரளவுக்கு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×