என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்தது விபத்து: சிறுமி பலி
Byமாலை மலர்8 March 2017 10:19 AM GMT (Updated: 8 March 2017 10:19 AM GMT)
கொடைக்கானல் மலையில் திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி கவிழ்ந்து சிறுமி பலியானார். 22 பேர் காயமடைந்தனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் அருகே உள்ளது ஆடலூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் 3 மினி லாரிகளில் பண்ணைக்காடு அருகே மூலையூரில் நடக்கும் உறவினர் திருமண வீட்டுக்கு சென்றனர். கடைசியாக சென்ற மினி லாரி பண்ணைக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து 1-வது வளைவில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த 22 பேர் படுகாயமடைந்தனர். கவியமண்ணாடி என்பவர் மகள் நிசாலட்சுமி (வயது 8) உடல் நசுங்கி பலியானார்.
விபத்து காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். மிக பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம் (60), ஜெயராணி (40), குமார் (36), பெரியநாயகம் (50), ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் பண்ணக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து காரணமாக திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே உள்ளது ஆடலூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் 3 மினி லாரிகளில் பண்ணைக்காடு அருகே மூலையூரில் நடக்கும் உறவினர் திருமண வீட்டுக்கு சென்றனர். கடைசியாக சென்ற மினி லாரி பண்ணைக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து 1-வது வளைவில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த 22 பேர் படுகாயமடைந்தனர். கவியமண்ணாடி என்பவர் மகள் நிசாலட்சுமி (வயது 8) உடல் நசுங்கி பலியானார்.
விபத்து காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். மிக பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம் (60), ஜெயராணி (40), குமார் (36), பெரியநாயகம் (50), ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் பண்ணக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து காரணமாக திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X