என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு எழுதிய கைதிக்கு திடீர் மாரடைப்பு
Byமாலை மலர்2 March 2017 9:17 AM GMT (Updated: 2 March 2017 9:17 AM GMT)
புழல் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு எழுதிய கைதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்குன்றம்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது.
புழல் ஜெயிலில் 98 கைதிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் புழல் ஜெயிலில் வந்து தேர்வு எழுதினார்கள்.
மதுரை மத்திய ஜெயிலில் இருந்து 11 கைதிகள் புழல் ஜெயிலுக்கு தேர்வு எழுத வந்திருந்தனர்.
மதுரை அருகே உள்ள கடலாடி என்ற பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி (வயது44) என்ற கைதி இன்று புழல் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். மதியம் 12 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது.
புழல் ஜெயிலில் 98 கைதிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் புழல் ஜெயிலில் வந்து தேர்வு எழுதினார்கள்.
மதுரை மத்திய ஜெயிலில் இருந்து 11 கைதிகள் புழல் ஜெயிலுக்கு தேர்வு எழுத வந்திருந்தனர்.
மதுரை அருகே உள்ள கடலாடி என்ற பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி (வயது44) என்ற கைதி இன்று புழல் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். மதியம் 12 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X