search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆலங்குடியில் நாளை கட்சி தலைவர்கள் போராட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆலங்குடியில் நாளை கட்சி தலைவர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடியில் நாளை கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் ஆலங்குடியில் நாளை (28-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    ம.தி.மு.க. சார்பில் (நாளை) ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக இன்று மதியம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

    Next Story
    ×