என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆலங்குடியில் நாளை கட்சி தலைவர்கள் போராட்டம்
Byமாலை மலர்27 Feb 2017 7:17 AM GMT (Updated: 27 Feb 2017 7:17 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடியில் நாளை கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் ஆலங்குடியில் நாளை (28-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
ம.தி.மு.க. சார்பில் (நாளை) ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக இன்று மதியம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் ஆலங்குடியில் நாளை (28-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
ம.தி.மு.க. சார்பில் (நாளை) ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக இன்று மதியம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X