search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
    X

    அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

    அரியலூர் அருகே நடந்து சென்ற 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து கைது செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தை சேர்ந்த சிறுமி திவ்யா(வயது 15, பெயர் மாற்றப் பட்டுள்ளது) . இவள் விளாங்குடி கிராமம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் திவ்யா அவரது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி (39) என்பவர் அந்த சிறுமியை வழி மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து திவ்யா, அவரது தாயிடம் கூறவே, அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கருணாநிதியை கைது செய்து அரியலூர் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி , கருணாநிதியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×