என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கத்தில் தீபா பேனர்கள் கிழிப்பு: போலீஸ் நிலையம் முற்றுகை
Byமாலை மலர்23 Feb 2017 7:28 AM GMT (Updated: 23 Feb 2017 7:28 AM GMT)
மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா படத்துடன் கூடிய பேனர்களை மர்ம நபர்கள் கிழித்தது தொடர்பாக தீபா ஆதரவாளர்கள் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
செங்கம்:
மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்களிடம் பெறும் வரவேற்பு உள்ளது.
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஜெ.தீபா பேரவையில் இணைந்து தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.
இது சசிகலா ஆதரவாளர் கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் செங்கத்தில் தீபா பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கம் புதிய பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், போளூர் ரோடு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தீபா படத்துடன் கூடிய பேனர்களை மர்ம நபர்கள் நேற்று இரவு கிழித்துள்ளனர்.
இன்று காலையில் பேனர்கள் கிழிக்கப்பட்டதை பார்த்த தீபா ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இது குறித்து ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து தீபா ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்களிடம் பெறும் வரவேற்பு உள்ளது.
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஜெ.தீபா பேரவையில் இணைந்து தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.
இது சசிகலா ஆதரவாளர் கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் செங்கத்தில் தீபா பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கம் புதிய பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், போளூர் ரோடு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தீபா படத்துடன் கூடிய பேனர்களை மர்ம நபர்கள் நேற்று இரவு கிழித்துள்ளனர்.
இன்று காலையில் பேனர்கள் கிழிக்கப்பட்டதை பார்த்த தீபா ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இது குறித்து ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து தீபா ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X