என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் முதல் அணு உலையில் பழுதை நீக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்22 Feb 2017 4:19 AM GMT (Updated: 22 Feb 2017 4:19 AM GMT)
முதல் அணு உலையில் உள்ள டர்பன் வால்வு நேற்று பழுதானது. விரைவில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. முதல் அணு உலை, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி மின்உற்பத்தியை தொடங்கியது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த அணு உலையில் வர்த்தக ரீதியாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்பி அங்கிருந்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்து கடந்த 16-ந்தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதலில் 70 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக 450 மெகாவாட் வரை அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் அணு உலையில் உள்ள டர்பன் வால்வு நேற்று பழுதானது. இதனால் அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சரி செய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இந்திய - ரஷ்ய விஞ்ஞானிகள் இணைந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. முதல் அணு உலை, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி மின்உற்பத்தியை தொடங்கியது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த அணு உலையில் வர்த்தக ரீதியாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்பி அங்கிருந்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்து கடந்த 16-ந்தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதலில் 70 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக 450 மெகாவாட் வரை அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் அணு உலையில் உள்ள டர்பன் வால்வு நேற்று பழுதானது. இதனால் அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சரி செய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இந்திய - ரஷ்ய விஞ்ஞானிகள் இணைந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X