search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே 4 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
    X

    பொள்ளாச்சி அருகே 4 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

    பொள்ளாச்சி அருகே கஞ்சாவுடன் 2 பேரை போலீசார் கைது செயதனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேர்நிலை சந்திப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து கஞ்சாவை விற்பனை செய்து கொண்டு இருந்த பேரூரை சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்திகேயன் (வயது 25), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருதாச்சலம் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×