search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்வதாக கூறி 10-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: கட்டிட தொழிலாளிக்கு போலீஸ் வலை
    X

    திருமணம் செய்வதாக கூறி 10-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: கட்டிட தொழிலாளிக்கு போலீஸ் வலை

    அன்னூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த கட்டிட தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அன்னூர்:

    கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார் என்கிற நிதின்குமார். கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்னூர் அருகே உள்ள ஆறுமுகம்பாளையம் தெற்கு மேட்டு தோட்டத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் சதீஸ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்கள் காதலை வளர்த்தனர்.

    இந்தநிலையில் சதீஸ்குமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

    பின்னர் அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்ததாக சதீஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×