என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி
Byமாலை மலர்17 Feb 2017 5:32 AM GMT (Updated: 17 Feb 2017 10:23 AM GMT)
தேனி அருகே நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் குமார்(வயது26). அசாமில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் நண்பர்கள் அருண்பாண்டி(18), சூர்யா(20) ஆகியோருடன் நேற்று தேனி வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் போடி திரும்பினர்.
மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார். கோடாங்கிபட்டி அருகே ஒத்தவீடு பகுதியில் சென்றபோது எதிரே மூணாறில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் மின்கம்பம், மாட்டுக்கொட்டகை ஆகியவற்றின் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த சிலர் காயமடைந்தனர்.
அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அருள்(37) என்பவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் குமார்(வயது26). அசாமில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் நண்பர்கள் அருண்பாண்டி(18), சூர்யா(20) ஆகியோருடன் நேற்று தேனி வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் போடி திரும்பினர்.
மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார். கோடாங்கிபட்டி அருகே ஒத்தவீடு பகுதியில் சென்றபோது எதிரே மூணாறில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் மின்கம்பம், மாட்டுக்கொட்டகை ஆகியவற்றின் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த சிலர் காயமடைந்தனர்.
அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அருள்(37) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X