search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ம.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் விலகல்
    X

    பா.ம.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் விலகல்

    ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ கே.வி.ராமநாதன். 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கும்போது கட்சியின் முதல் ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றவர். மேலும் இவர் மாவட்ட துணைப் பொதுச் செயலாளர், மாநாடு துணைத்தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர்.

    கடந்த 2006-ம் ஆண்டு பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

    இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கே.வி.ராமநாதன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ம.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களை என் தலைமையில் சிறப்பாக நடத்தி உள்ளேன். இட ஒதுக்கீடு வழங்ககோரி என் தலைமையில் ரெயில் மறியல் நடந்தது.

    வன்னியர் சங்க மாநாடு பொதுக்கூட்டம், போராட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தினேன். மண்டல மாநாட்டை ஈரோடு, நாகப்பட்டினம், நெல்லை, திருச்சி இடங்களில் சிறப்பாக நடத்தி இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக டாக்டர் ராமதாஸ் என்னை பாராட்டி மாநாட்டு நாயகன் என்று எனக்கு விருது வழங்கி பாராட்டினார். அவர் உத்தரவிட்ட அனைத்து கட்சி பணிகளையும் சிறப்பாக செய்து நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தேன்.

    தற்போது பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள கசப்பான சம்பவங்களால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கட்சியில் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

    இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×