என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ‘சஸ்பெண்டு’
Byமாலை மலர்16 Feb 2017 6:49 AM GMT (Updated: 16 Feb 2017 6:49 AM GMT)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
காரைக்குடி:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரிடம் அந்த துறையின் தலைவர் பேராசிரியர் அருணாசலம், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவிக்கு மன உளைச்சல் கொடுத்துள்ளார். இதே போல் வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த மாணவி, தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் அருணாசலம் மீது பெண் வன்கொடுமை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அருணாசலத்தை பணியிடை நீக்கம் செய்து அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரிடம் அந்த துறையின் தலைவர் பேராசிரியர் அருணாசலம், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவிக்கு மன உளைச்சல் கொடுத்துள்ளார். இதே போல் வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த மாணவி, தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் அருணாசலம் மீது பெண் வன்கொடுமை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அருணாசலத்தை பணியிடை நீக்கம் செய்து அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X