என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழர்களின் வீரமும் அன்பும் என்னை கவர்ந்தது - தலைமை நீதிபதி பெருமிதம்
Byமாலை மலர்16 Feb 2017 6:42 AM GMT (Updated: 16 Feb 2017 6:42 AM GMT)
தமிழர்களின் வீரம் மற்றும் அன்பு ஆகியவை தன்னை வெகுவாக கவர்ந்தது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தனது பிரிவு உபசார நிகழ்சியில் பெருமிதத்துடன் பேசினார்.
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது இருக்கும் எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று செல்ல இருக்கிறார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பிறப்பித்திருந்தார். இதையொட்டி சென்னையில் அவருக்கு இன்று பிரிவு உபச்சார விழா நடந்தது.
இவ்விழாவில் பேசிய எஸ்.கே.கவுல், “தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் தனித்துவமானது மற்றும் யாருடனும் ஒப்பிட முடியாதது. இது என்னை பெருமையடையச் செய்தது. தமிழர்களின் வீரமும் அன்பும் என்னை வெகுவாக கவர்ந்தது. இளம் வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் தேவையான ஊக்கமளித்து வழிகாட்டியாக இருக்க வேண்டும்.” என பெருமிதத்துடன் பேசினார்.
விரைவில் எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிவு உபச்சார விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X