என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலாவுக்கு எதிராக பேட்டியளித்த தேனி போலீஸ்காரர் இடமாற்றம்
Byமாலை மலர்15 Feb 2017 4:45 AM GMT (Updated: 15 Feb 2017 4:45 AM GMT)
தேனியில் சசிகலாவுக்கு எதிராக பேட்டியளித்த போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் குச்சனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவை முதல்- அமைச்சராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்தால் மெரினாவில் ஜெயலலிதா சமாதி முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பேட்டியளித்தார்.
நேற்று சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்பை அடுத்து தேனி நேரு சிலை அருகே பேட்டி அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அப்பகுதியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தேனி நேரு சிலை சிக்னல் அருகே வந்த வேல் முருகனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி இனிமேல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அவர் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் குச்சனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவை முதல்- அமைச்சராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்தால் மெரினாவில் ஜெயலலிதா சமாதி முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பேட்டியளித்தார்.
நேற்று சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்பை அடுத்து தேனி நேரு சிலை அருகே பேட்டி அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அப்பகுதியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தேனி நேரு சிலை சிக்னல் அருகே வந்த வேல் முருகனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி இனிமேல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அவர் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X