search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தாமதத்தால் மக்கள் நலப்பணிகள் முடங்கி விட்டது: யுவராஜா பேட்டி
    X

    கவர்னர் தாமதத்தால் மக்கள் நலப்பணிகள் முடங்கி விட்டது: யுவராஜா பேட்டி

    தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலையால் மக்கள் நலப்பணிகள் தடைபட்டு உள்ளது என த.மா.கா.இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறினார்.

    ஈரோடு:

    த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் த.மா.கா.வினர் இன்று ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில்உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ விடியல்சேகர், மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணை தலைவர் ஆறுமுகம்,பொதுக்குழு உறுப்பினர் சந்திர சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சீமை கருவேலமரங்களை அகற்றும்படி மதுரை ஐகோர்ட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவு சார்பில் கட்சி ஈரோட்டில் இன்று கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. வருகிற 27-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இந்த பணி நடைபெறும்.

    தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலையால் மக்கள் நலப்பணிகள் தடைபட்டு உள்ளது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

    எனவே முடங்கி கிடக்கும் மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் உடனே அ.தி.மு.க.வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நிலையான ஆட்சிஅமைய அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.முக. எம்.எல்.ஏக் களை பதுக்கி வைத்து அவர்களை பாதுகாக்கும் சசிகலாவை பெண்தாதா என்று சொல்வதை விட கோழைபோல் செயல்படுகிறார் என்று தான் சொல்லவேண்டும்.

    உண்மையாகவே அதிகமான எம்.எல்.ஏக்கள் சசிகலாவை ஆதாக்கிறார்கள் என்றால் அவர்களை விடுவித்து தொகுதி மக்களின் நலத்திட்டங்களை செய்ய அனுமதிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×