என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின் கூவத்தூரிலேயே தங்குகிறார் சசிகலா
Byமாலை மலர்13 Feb 2017 12:10 PM GMT (Updated: 13 Feb 2017 12:10 PM GMT)
கூவாத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களுடன் மூன்றாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இன்று அங்கேயே தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலில் அதிமுகவினரின் ஒவ்வொரு அசைவும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சசிகலா மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே யார் ஆட்சியை பிடிப்பது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக கூவத்தூர் சென்று தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விவாதித்த சசிகலா இன்றும் அவர்களை சந்திக்க கூவத்தூர் சென்றுள்ளார்.
எம்.எல்.ஏக்களை தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவரும் சசிகலா, இன்றும் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், இன்று இரவு அங்கேயே சசிகலா தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X