search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு அருகே லாரி மோதி குழந்தை பலி
    X

    திருவையாறு அருகே லாரி மோதி குழந்தை பலி

    திருவையாறு அருகே லாரி மோதி 3 வயது குழந்தை பலியானது. விபத்து எற்படுத்திய லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிரவீண் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவையாறு:

    அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி. திருப்பூரில் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு பிரதிப்ஷா (3) என்ற பெண் குழந்தை இருந்தது. கண்ணகி தனது குழந்தையை அழைத்து கொண்டு திருவையாறு அருகே அகிலாண்டபுரத்தில் உள்ள தாய் சரோஜா வீட்டிற்கு வந்தார்.

    நேற்று மாலை பிரதிப்ஷா குடிநீர் குழாயில் பாத்திரம் கழுவிக் கொண்டு இருந்த பாட்டி சரோஜாவை நோக்கி ஓடியது.

    அப்போது காரைக்காலில் இருந்து மைசூருக்கு டைல்ஸ் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி குழந்தை மீது மோதியது. இதில் பிரதிப்ஷா சம்பவ இடத்திலே இறந்தாள். இது குறித்து திருவையாறு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லாரி மோதி பலியான குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து எற்படுத்திய லாரியை ஓட்டி வந்த இலுப்பக்கோரையை சேர்ந்த டிரைவர் பிரவீண் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான குழந்தையின் தாய் கண்ணகிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் பிறந்து இறந்து விட்டனர் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×