என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் உச்சகட்ட உறைபனி: பொதுமக்கள் தவிப்பு
Byமாலை மலர்2 Feb 2017 6:37 AM GMT (Updated: 2 Feb 2017 6:37 AM GMT)
கொடைக்கானலில் இன்று உச்சகட்ட உறைபனி நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இந்த வருடம் சராசரி மழை அளவு குறைவாகவே காணப்பட்டது. வருடந்தோறும் டிசம்பர் மாதம் கடுமையான பனி நிலவும். மழைக்கு பிறகு காணப்படும் இந்த பனியின் தாக்கம் இந்த வருடம் சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொடைக்கானலில் உறை பனி நிலவியது. அதன் பிறகு ஒரு சில நாட்கள் சாரல் மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்தது. பகலில் கடும் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமலேயே இருந்தது.
கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு பிறகு கொடைக்கானல் நகரில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது இன்று உச்சகட்ட உறை பனி நிலவியது. ஏரிச்சாலை, பூங்கா உள்பட அனைத்து பகுதிகளிலும் பனி போர்வை காணப்பட்டது. வீட்டில் இருந்து கதவை திறக்க முடியாதபடி பனிக்காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
வாகனங்களில் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. உறைபனி காரணமாக ஏரிச்சாலை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த உறை பனி காரணமாக இனி கொடைக்கானலில் மழை பெய்யாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் இந்த வருடம் சராசரி மழை அளவு குறைவாகவே காணப்பட்டது. வருடந்தோறும் டிசம்பர் மாதம் கடுமையான பனி நிலவும். மழைக்கு பிறகு காணப்படும் இந்த பனியின் தாக்கம் இந்த வருடம் சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கொடைக்கானலில் உறை பனி நிலவியது. அதன் பிறகு ஒரு சில நாட்கள் சாரல் மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்தது. பகலில் கடும் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமலேயே இருந்தது.
கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு பிறகு கொடைக்கானல் நகரில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியது இன்று உச்சகட்ட உறை பனி நிலவியது. ஏரிச்சாலை, பூங்கா உள்பட அனைத்து பகுதிகளிலும் பனி போர்வை காணப்பட்டது. வீட்டில் இருந்து கதவை திறக்க முடியாதபடி பனிக்காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
வாகனங்களில் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. உறைபனி காரணமாக ஏரிச்சாலை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த உறை பனி காரணமாக இனி கொடைக்கானலில் மழை பெய்யாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X