என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை செம்படாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை 2 ஆண்டு களாக காதலித்து வந்தார். கடந்த 5.10.2015 அன்று பள்ளிக்கூடம் செல்வதற்காக அந்த மாணவி நடுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த சந்தோஷ் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய மாணவி சந்தோசுடன் வேனில் சென்றார். பின்னர் குன்னூர் அருகே உள்ள அரவன்காடு பகுதிக்கு மாணவியை கடத்திச்சென்ற சந்தோஷ் அங்கு உள்ள ஒருவீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததார்.
இது குறித்து சத்தியமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் சந்தோஷ் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார். அப்போது அவர் மாணவியை கடத்திசென்ற குற்றத்துக்காக சந்தோசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் அவர் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டு இருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு அவர் பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்