என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் மக்களாட்சி: போராட்டத்தில் ராணுவ வீரர் பேச்சு
Byமாலை மலர்20 Jan 2017 10:01 AM GMT (Updated: 20 Jan 2017 10:01 AM GMT)
மக்களின் விருப்பதை நிறைவேற்றுவதுதான் மக்களாட்சி, மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அரசோ, நீதிமன்றமோ இருக்கக்கூடாது என்று மதுரை போராட்டத்தில் ராணுவ வீரர் பேசினார்.
மதுரை:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை கட்டபொம்மன் சிலை அருகே நேற்று மதியம் முதல் விடிய, விடிய போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை நடந்த போராட்டத்தில் மாணவ-மாணவிகள், பெண்கள், ஆசிரியர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், முதியவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்க ளது கருத்துக்களை பேசினர். மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் செல்வக்குமார் என்பவர் ராணுவ உடையில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
நான் ராணுவ வீரராக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். மாணவர்கள் தன்னலம் கருதாது தமிழர்களின் பாரம்பரியத்திற்காக நடத்தி வரும் இந்த போராட்டத்தில் இந்தியனாக, தமிழனாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் மக்களாட்சி. மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அரசோ, நீதிமன்றமோ இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராணுவ வீரர் செல்வக்குமாரின் பேச்சை மாணவர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இஸ்மாயில் பேசுகையில், மாணவர்கள் நடத்தும் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தி மாணவர்கள் கேட்பார்கள். தற்போது மாணவர்கள் பாடம் நடத்தி ஆட்சியாளர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிருநாட்களில் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். அதுவரை நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை கட்டபொம்மன் சிலை அருகே நேற்று மதியம் முதல் விடிய, விடிய போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை நடந்த போராட்டத்தில் மாணவ-மாணவிகள், பெண்கள், ஆசிரியர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், முதியவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்க ளது கருத்துக்களை பேசினர். மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் செல்வக்குமார் என்பவர் ராணுவ உடையில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
நான் ராணுவ வீரராக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். மாணவர்கள் தன்னலம் கருதாது தமிழர்களின் பாரம்பரியத்திற்காக நடத்தி வரும் இந்த போராட்டத்தில் இந்தியனாக, தமிழனாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் மக்களாட்சி. மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அரசோ, நீதிமன்றமோ இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராணுவ வீரர் செல்வக்குமாரின் பேச்சை மாணவர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இஸ்மாயில் பேசுகையில், மாணவர்கள் நடத்தும் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தி மாணவர்கள் கேட்பார்கள். தற்போது மாணவர்கள் பாடம் நடத்தி ஆட்சியாளர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஓரிருநாட்களில் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். அதுவரை நமது போராட்டம் தொடர வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X