search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் குடிநீர் தட்டுப்பாடு: புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் - கலெக்டர் அறிவிப்பு
    X

    திருவள்ளூரில் குடிநீர் தட்டுப்பாடு: புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் - கலெக்டர் அறிவிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்களை கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை அளவு, சராசரி அளவை விட குறைவாக பெய்ததால், வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக, குடிநீர் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை அளிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. புகார்கள் அளிப்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்:

    செல்போன் எண்: 7548846801, வாட்ஸ் ஆப் எண்: 7548846803, தொலைபேசி எண்: 044- 27665248, கட்டணம் இல்லா தொலைபேசி 0177

    இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×