என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லைக்கு வந்தது
Byமாலை மலர்19 Jan 2017 7:32 AM GMT (Updated: 19 Jan 2017 7:32 AM GMT)
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லைக்கு வந்தது. இந்த தண்ணீர் நாளை பூண்டி ஏரிக்கு சென்றடையும்.
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
பருவ மழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 9-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை ஆந்திர அரசு திறந்து விட்டது.
கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடார்ந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரை கால்வாய் ஓரங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட மதகுகளை திறந்து ஆந்திர விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு பாய்ச்சிவிட்டதால் கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா மாநிலம் சென்று திறக்கப்பட்ட மதகுகளை மூடும்படி அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதை ஏற்று விவசாயிகள் நேற்று மதகுகளை மூடி விட்டனர்.
இதன் பலனாக இன்று காலை 8 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் தமிழ எல்லையான ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயின்டுக்கு வந்தடைந்தது. வினாடிக்கு 5 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நாளை பூண்டி ஏரிக்கு சென்றடைய வாய்ப்பு உள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி 22.78 அடி தண்ணீர் மட்டம் பதிவானது. 550 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு 21 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
பருவ மழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 9-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை ஆந்திர அரசு திறந்து விட்டது.
கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடார்ந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 1700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரை கால்வாய் ஓரங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட மதகுகளை திறந்து ஆந்திர விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு பாய்ச்சிவிட்டதால் கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா மாநிலம் சென்று திறக்கப்பட்ட மதகுகளை மூடும்படி அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதை ஏற்று விவசாயிகள் நேற்று மதகுகளை மூடி விட்டனர்.
இதன் பலனாக இன்று காலை 8 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் தமிழ எல்லையான ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயின்டுக்கு வந்தடைந்தது. வினாடிக்கு 5 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நாளை பூண்டி ஏரிக்கு சென்றடைய வாய்ப்பு உள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி 22.78 அடி தண்ணீர் மட்டம் பதிவானது. 550 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு 21 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X