என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காட்டில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரனை
Byமாலை மலர்19 Jan 2017 4:43 AM GMT (Updated: 19 Jan 2017 4:43 AM GMT)
ஆற்காட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காட்டில் ஜக் அக்ரகாரம் தெருவில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை 5 மணியளவில் அலுவலக ஊழியர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் நிலையில் தொலைபேசி மணி அடித்தது. இதை தலைமை தபால் நிலைய அலுவலர் அன்பழகன் எடுத்து பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர் இந்தியும், தமிழும் கலந்து பேசியவாறு தபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனே இதுதொடர்பாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்கள், வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் லூசியுடன் விரைந்து வந்து தபால் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. போனில் வந்த தகவல் புரளி தான் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காட்டில் ஜக் அக்ரகாரம் தெருவில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை 5 மணியளவில் அலுவலக ஊழியர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் நிலையில் தொலைபேசி மணி அடித்தது. இதை தலைமை தபால் நிலைய அலுவலர் அன்பழகன் எடுத்து பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர் இந்தியும், தமிழும் கலந்து பேசியவாறு தபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனே இதுதொடர்பாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்கள், வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் லூசியுடன் விரைந்து வந்து தபால் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. போனில் வந்த தகவல் புரளி தான் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X