என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் 20-ந்தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Jan 2017 11:32 AM GMT (Updated: 18 Jan 2017 11:32 AM GMT)
தூத்துக்குடியில் வருகிற 20-ந்தேதி அன்று தி.மு.க. சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க, நீட் என்ற தகுதி தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த தேர்வால் தமிழக மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும் மத்திய அரசு நீட் தகுதி தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. மாநில அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே மத்திய அரசு அறிவித்து உள்ள நீட் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி, மத்திய, மாநில அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் 20-ந்தேதி காலை 10 மணிக்கு, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மகால் அருகே ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் (தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி) தலைமையில் நடக்கிறது. கீதாஜீவன் எம்.எல்.ஏ, முன்னிலை வகிக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர்கள் அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க, நீட் என்ற தகுதி தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த தேர்வால் தமிழக மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும் மத்திய அரசு நீட் தகுதி தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. மாநில அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே மத்திய அரசு அறிவித்து உள்ள நீட் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி, மத்திய, மாநில அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் 20-ந்தேதி காலை 10 மணிக்கு, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மகால் அருகே ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் (தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி) தலைமையில் நடக்கிறது. கீதாஜீவன் எம்.எல்.ஏ, முன்னிலை வகிக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர்கள் அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X