என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறை அருகே இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு
Byமாலை மலர்18 Jan 2017 11:03 AM GMT (Updated: 18 Jan 2017 11:03 AM GMT)
மணப்பாறை அருகே இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு நின்று அடக்கினர்.
மணப்பாறை:
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதனை தடை செய்துவரும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டும் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க தடையை மீறி ஜல்லிக்கட்டு ஆங்காங்கே நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று நவல்பட்டு, மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. தற்காலிக வாடிவாசல் அமைத்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டனர். அதனை இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
இந்த நிலையில் இன்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே உள்ள ஆவரம்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. அங்குள்ள புனித இஞ்ஞாசியார் ஆலயம் முன்பு அந்த கிராமத்தினர் வாடிவாசல் அமைத்திருந்தனர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு நின்று அடக்கினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வையம்பட்டி போலீசார் ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்கு விரைந்து வந்த தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல் மணப்பாறையை அடுத்த பெரியகுளத்துப்பட்டி பகுதியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அதனை தடை செய்துவரும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டும் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க தடையை மீறி ஜல்லிக்கட்டு ஆங்காங்கே நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று நவல்பட்டு, மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. தற்காலிக வாடிவாசல் அமைத்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டனர். அதனை இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
இந்த நிலையில் இன்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே உள்ள ஆவரம்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. அங்குள்ள புனித இஞ்ஞாசியார் ஆலயம் முன்பு அந்த கிராமத்தினர் வாடிவாசல் அமைத்திருந்தனர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு நின்று அடக்கினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வையம்பட்டி போலீசார் ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்கு விரைந்து வந்த தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல் மணப்பாறையை அடுத்த பெரியகுளத்துப்பட்டி பகுதியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X