என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலையில் 20-ந்தேதி நடக்கும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு
Byமாலை மலர்17 Jan 2017 10:39 AM GMT (Updated: 17 Jan 2017 10:39 AM GMT)
தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
நாகர்கோவில்:
குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஜெகநாதன், குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் ஜெயபிரபாகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தக்கலை அருகில் உள்ள மேட்டுக்கடை லலிதாமகால் திருமண மண்டபத்தில் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தே.மு.தி.க. சார்பில் “உங்களுடன் நான்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் நோக்கமே கட்சியின் தொண்டர்களை, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுப்பது ஆகும்.
ஆகவே குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜயகாந்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறும், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, அந்தந்த வார்டு கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் புகைப்படம் எடுப்பதற்கான டோக்கன் பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஜெகநாதன், குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் ஜெயபிரபாகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தக்கலை அருகில் உள்ள மேட்டுக்கடை லலிதாமகால் திருமண மண்டபத்தில் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தே.மு.தி.க. சார்பில் “உங்களுடன் நான்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் நோக்கமே கட்சியின் தொண்டர்களை, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுப்பது ஆகும்.
ஆகவே குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜயகாந்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறும், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, அந்தந்த வார்டு கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் புகைப்படம் எடுப்பதற்கான டோக்கன் பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X