search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் 20-ந்தேதி நடக்கும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு
    X

    தக்கலையில் 20-ந்தேதி நடக்கும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு

    தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஜெகநாதன், குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் ஜெயபிரபாகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தக்கலை அருகில் உள்ள மேட்டுக்கடை லலிதாமகால் திருமண மண்டபத்தில் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தே.மு.தி.க. சார்பில் “உங்களுடன் நான்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் நோக்கமே கட்சியின் தொண்டர்களை, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுப்பது ஆகும்.

    ஆகவே குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜயகாந்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறும், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, அந்தந்த வார்டு கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் புகைப்படம் எடுப்பதற்கான டோக்கன் பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×