search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் டெல்லி சென்றார்
    X

    முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் டெல்லி சென்றார்

    டெல்லியில் இன்று நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டத்தில் நாராயணசாமி பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு கூடுதல்நிதி மற்றும் புதுவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்துஅடிக்கடி டெல்லி சென்று பிரதமர், நிதித்துறை மந்திரி உள்பட பல்வேறு துறை மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.

    இதற்கிடையே நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு ரங்கநாதர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்ற நாராயணசாமி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    டெல்லியில் இன்று நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டத்தில் நாராயணசாமி பங்கேற்றார். பின்னர் இன்று இரவு அல்லது நாளை காலை அவர் புதுவை திரும்புவார் என கூறப்படுகிறது.

    Next Story
    ×