என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலங்காநல்லூர்- பாலமேட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Byமாலை மலர்13 Jan 2017 10:45 AM GMT (Updated: 13 Jan 2017 10:45 AM GMT)
பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், பாலமேட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம், மறுநாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இப்பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளாரேஸ் உள்ளிட்டவை நடந்து விடாமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதற்றமான பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்குமிடங்களிலும் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காளைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்னனர். ஊரகப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் இருக்குமாறு காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம், மறுநாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இப்பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளாரேஸ் உள்ளிட்டவை நடந்து விடாமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதற்றமான பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்குமிடங்களிலும் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காளைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்னனர். ஊரகப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் இருக்குமாறு காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X