search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
    X

    திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

    திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). திருச்சியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு ‌ஷர்மிளா (7), ஷார்வதா(6), என்ற 2 மகளும் , சபரிதாசன்(2½) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று மாலை 5 பேரும் வீட்டிற்குள் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    5 பேரும் எதற்காக வி‌ஷம் குடித்தனர் என்று தெரியவில்லை.குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவியும் சேர்ந்து குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனரா? அல்லது ஏழ்மை காரணமாக வி‌ஷம் குடித்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×