என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்9 Dec 2016 4:02 AM GMT (Updated: 9 Dec 2016 4:02 AM GMT)
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு ஜீவானந்த புரத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது 42). கட்டிட தொழிலாளி.
இவரது மகள் மதுமிதா(19) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மதுமிதாவை கண்டித்தனர். இதனால் மதுமிதா கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த மதுமிதா மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மதுமிதாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக் டர் பொன்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு ஜீவானந்த புரத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது 42). கட்டிட தொழிலாளி.
இவரது மகள் மதுமிதா(19) அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மதுமிதாவை கண்டித்தனர். இதனால் மதுமிதா கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த மதுமிதா மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மதுமிதாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக் டர் பொன்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X