search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற பெண் கைது
    X

    மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற பெண் கைது

    திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு போதை மாத்திரைகளை கடத்த முயன்ற பெண்னை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து போதை பொருள் கடத்தி செல்வதாக சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இரவு திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு செல்ல இருந்த பயணி களின் உடைமைகளை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தோதனை செய்தனர்.

    அப்போது மலேசியாவிற்கு செல்வதற்காக வந்த ஒரு பெண் பயணியை அதிகாரிகள் சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை மறைத்து மலேசியாவிற்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1,200 போதை மாத்திரைகள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.

    பிடிபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார் பட்டியை சேர்ந்தவர் மஞ்சுளா அரசு பிள்ளை (வயது 57) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×