search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் ரெயில் பெட்டி மீது ஏறி செல்பி எடுத்த பள்ளி மாணவன் சாவு
    X

    நெல்லையில் ரெயில் பெட்டி மீது ஏறி செல்பி எடுத்த பள்ளி மாணவன் சாவு

    நெல்லையில் ரெயில் பெட்டி மீது ஏறி செல்பி எடுத்த பள்ளி மாணவன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் உயிரிழந்தார்.

    நெல்லை, டிச. 6-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி லட்சுமி நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது அண்ணன் மகன் திருமணம் நெல்லையில் கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற் காக காசிராஜன் தனது குடும்பத்தினருடன் கடந்த 3-ந்தேதி நெல்லை வந்தார்.

    பிளஸ்-2 படித்து வந்த அவரது மகன் யுவராஜ் (வயது17) திருமணத்திற்கு வந்திருந்தார். அவரும், அவரது உறவினரான சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பார்த்திபன் (15) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (4-ந்தேதி) காலை நெல்லை ரெயில் நிலைய பகுதியில் நடந்து சென்றனர்.

    அப்போது ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் கள் நிறுத்தப்பட்டிருக்கும் பிளாட்பாரத்தில் அவசரகால மீட்பு ரெயில் பெட்டி நின்று கொண்டிருந்தது. அதை பார்த்த யுவராஜ் அதன்மீது ஏறி நின்று செல்போனில் ‘செல்பி’ எடுக்க விரும்பினார். இதையடுத்து அவர் ரெயில் பெட்டியின் மீது ஏறினார்.

    அப்போது அதன் மேலே சென்ற மின்சார ரெயிலுக்கான உயர் அழுத்த மின் கம்பியை அவர் கவனிக்கவில்லை. ‘செல்பி’ எடுத்தபோது எதிர்பாராத விதமாக யுவராஜை மின்சாரம் தாக்கியது. இதில் யுவராஜ் உடல் கருகினார்.

    உடனே அவரை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் யுவராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே சப்-இன்ஸ் பெக்டர் பார்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×