என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லையில் ரெயில் பெட்டி மீது ஏறி செல்பி எடுத்த பள்ளி மாணவன் சாவு
நெல்லை, டிச. 6-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி லட்சுமி நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது அண்ணன் மகன் திருமணம் நெல்லையில் கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற் காக காசிராஜன் தனது குடும்பத்தினருடன் கடந்த 3-ந்தேதி நெல்லை வந்தார்.
பிளஸ்-2 படித்து வந்த அவரது மகன் யுவராஜ் (வயது17) திருமணத்திற்கு வந்திருந்தார். அவரும், அவரது உறவினரான சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பார்த்திபன் (15) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் (4-ந்தேதி) காலை நெல்லை ரெயில் நிலைய பகுதியில் நடந்து சென்றனர்.
அப்போது ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் கள் நிறுத்தப்பட்டிருக்கும் பிளாட்பாரத்தில் அவசரகால மீட்பு ரெயில் பெட்டி நின்று கொண்டிருந்தது. அதை பார்த்த யுவராஜ் அதன்மீது ஏறி நின்று செல்போனில் ‘செல்பி’ எடுக்க விரும்பினார். இதையடுத்து அவர் ரெயில் பெட்டியின் மீது ஏறினார்.
அப்போது அதன் மேலே சென்ற மின்சார ரெயிலுக்கான உயர் அழுத்த மின் கம்பியை அவர் கவனிக்கவில்லை. ‘செல்பி’ எடுத்தபோது எதிர்பாராத விதமாக யுவராஜை மின்சாரம் தாக்கியது. இதில் யுவராஜ் உடல் கருகினார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் யுவராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே சப்-இன்ஸ் பெக்டர் பார்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்